பூமணி அம்மா அறக்கட்டளையால் நெடுந்தீவில் முன்பள்ளி சிறார்களுக்கு உதவி

உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபையால் நடாத்தப்பட்ட சிறுவர்கள் தின விழாவில் நெடுந்தீவு மத்தி மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற விழையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளில் பங்குபற்றி சிறப்பித்த மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வாங்க நிதி உதவி வழங்கி உதவும்படி நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபையின் போதகர் P.S.றொக்சான் அவர்கள் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம்  விடுத்த கோரிக்கைக்கு அமைய,குறித்த விடயத்தினை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ் தீவகம் சரவணை மேற்கு வேலணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று திரு செல்வராசா அவர்கள் தனது சொந்த நிதி உதவி மூலம் அனைத்து மாணவர்களுக்கும் பரிசு பொருட்கள் வாங்க நிதி உதவி செய்திருந்தார்.

கலை நிகழ்வுகள் யாவும் போதகர் P.S.றொக்சான் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றதோடு மாணவர்கள் கெளரவிக்கப்பட்டு அவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் அனுசரணையில் பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன,மேற்படி நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள்,மத போதகர்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: webeditor