வீரமுனையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் வகவிழ்ந்த முச்சக்கரவண்டி..!

வீரமுனையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் வகவிழ்ந்த முச்சக்கரவண்டி..!

வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று (03.09.2025) புதன்கிழமை அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை நூலகத்திற்கருகாமையில் இடம்பெற்றுள்ளது.

 

இவ்விபத்தில் 26 வயதுடைய சம்மாந்துறை மஜீட்புரம் பகுதியைச்சேர்ந்த முச்சக்கர வண்டிச்சாரதி காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin