முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு..!

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு..!

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்றைய தினம்(29.08.2025) பி.ப 3.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகளை கடற்றொழில் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் கேட்டறிந்து கொண்டதுடன் சட்டவிரோத மீன்பிடி முற்றாக தடைசெய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.

 

சட்டவிரோத மீன்பிடியை தடுக்கும் வகையில் விசேட செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

நீண்ட நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியை தடைசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்ததுடன் மாவட்ட அசாங்க அதிபரை சந்தித்து மகஜரும் கையளித்திருந்தனர்.

 

இவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கௌரவ மீன்பிடி அமைச்சரை மாவட்ட செயலகத்திற்கு வரவழைத்து மீனவர்களுக்கும் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள்.

 

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திலகநாதன், கௌரவ ஜெகதீஸ்வரன், கௌரவ ரவிகரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. எஸ்.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், மீனவ சமாசங்களின் உறுப்பினர்கள், மீனவ சம்மேளனத்தின் தலைவர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin