யாழ் நெடுந்தீவில் 150 கிலோக்கிராம் கஞ்சாவுடன் 04 பேர் கைது..!
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் (29.08.2025) ஓரு படகுடன் 150 கிலோக்கிராம் கஞ்சாவுடனும் 04சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
இவர்களில் மூவர் ஊர்காவற்றுறை பிரதேசத்தை சேர்நதவர்கள் எனவும் ஒருவர் வெளிமாவட்டத்தை சேர்ந்தஙர் எனவும் பொலிசார் வட்டாரங்கள் தெரிவிக்கினறன
கைது செய்யபட்டவர்கள் மற்றும் கஞ்சா என்பன நெடுந்தீவு பொலிசாரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை ஊர்காவற்றுறை பொலிசாரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொணடுள்ளனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்


