இந்திய மீனவர்கள் தொடர் கைது: இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதைக் கண்டித்து, தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்தியா ஊடகங்களின் அறிக்கைகளின்படி, தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் சங்கக் கூட்டத்தில் இதற்கான ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கக் கோரி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

