யாழ். தென்மராட்சி, கொடிகாமம் எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், உள் வீதியிலிருந்து ஏ9 வீதியில் ஏற முற்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் எழுதுமட்டுவாள் தெற்கைச் சேர்ந்த 55 வயதுடைய செல்வகுணசிங்கம் பேரின்பநாயகி என்ற பெண் படுகாயமடைந்துள்ளார். அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


