இந்திய மீனவர்கள்12 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள்12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் இன்று அதிகாலை (27.10) இலங்கை கடற்படையினரால் அவர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, மீன்பிடிப் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin