மெத்தைக்குக் கீழ் நிர்வாணமாக பிடிபட்டட ஏ.எல் மாணவி!

யாழ் கந்தர்மடம் பகுதிக்கு அண்மையில் நேற்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டு அறையில் அவனது கட்டிலுக்கு கீழ் இருந்து 19 வயது பிரபல பாடசாலை மாணவி ஒருவர் நிர்வாண நிலையில் பிடிக்கப்பட்டார்.

குறித்த மாணவனின்அறைக்கு இவ்வாறு பல மாணவிகள் பல தடவைகள் வந்து சென்றுள்ளார்கள். இது தொடர்பாக குறித்த வீட்டின் சொந்தக்காரியான வயோதிப மாதுவுக்கு அயலவர்கள் புகார் கொடுத்திருந்தார்கள். ஆனால் மூதாட்டி அது தொடர்பாக அக்கறை செலுத்தாது தொடர்ச்சியாக மாணவன் தங்குவதற்கு அனுமதித்துள்ளார்.

குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்வதாகவும் 78 வயதான மூதாட்டி தனியே வாழ்ந்து வந்ததால் தனது பாதுகாப்புக்காக குறித்த மாணவனை அறையில் தங்க வைத்துள்ளதாக மூதாட்டி அயலவர்களுக்கு கூறி வந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே நேற்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவன் மாஸ்க்ஸ் அணிந்தவாறு பெண் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் தனது றுாமுக்கு கொண்டு செல்வதை அயலவர்கள் அவதானித்துள்ளார்கள்.

அதன் பின்னரே அயலவர்கள் சிலர் சேர்ந்து குறித்த மாணவனின் அறைக்குள் நுழைந்து மாணவியை நிர்வாண நிலையில் பிடித்ததுடன் குறித்த மாணவனையும் நையப்புடைத்துள்ளதாகத் தெரியவருகின்றது. நிலத்தில் போடப்பட்டிருந்த மெத்தைக்கு கீழ் மாணவி நிர்வாண நிலையில் மறைந்து படுத்திருந்ததாகத் தெரியவருகின்றது.

அயல்வீட்டுப் பெண்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மாணவி பின்னர் அவளது பெற்றோர் வரவழைக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகத் தெரியவருகின்றது. ஏ.எல் பாடத்தில் வர்த்தகப் பிரிவுக்கு தனிப்பட்ட வகுப்புகள் கொடுப்பதாகக் கூறியே குறித்த பல்கலைக்கழக மாணவன் தனித்தனியே பெண்களை தனது றுாமுக்கு கொண்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மாணவியின் பெற்றோரின் தகவலின்படி, மாணவி குறித்த பல்கலைக்கழக மாணவனிடம் பல மாணவிகளுடன் சேர்ந்து குறுாப் கிளாஸ் வகுப்புக்குச் சென்று வந்தவர் என்பதுடன் பல்கலைக்கழக மாணவன் இன்னொரு மாணவியின் வீட்டில் 15 பேரளவான மாணவிகளுடன் சேர்ந்து தனது மகளுக்கும் வகுப்பு எடுத்து வந்தவர் என பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.

அயலவர்கள் தாக்குதல் நடாத்தி விட்ட பின்னர் மாணவியின் தந்தையும் குறித்த பல்கலைக்கழக மாணவன் மீது கடுமையான தாக்குதல் நடாத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் பொலிசாருக்கு அறிவிக்க முற்பட்ட போது தனது மகள் உட்பட்ட ஏனைய மாணவிகளுக்கு இதனால் பெரும் பிரச்சனை உருவாகும் என கூறி பெற்றோர் மறுத்துவிட்டு தமது மகளை அழைத்துச் சென்றதாக அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவி உடலுறவு கொள்வதற்கு முன்னரே காப்பாற்றப்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மாணவியின் பெற்றோரின் தகவலின் படி மாணவியை பாடசாலை, ரியூசன் உட்பட சகலவற்றுக்கும் தாமே மோட்டார்சைக்கிளில் ஏற்றி இறக்குவதாகவும் இன்றும் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை நண்பியின் பிறந்தநாளுக்கு செல்வதாக கூறியதால் பிறந்தநாளுக்கு பரிசாக கொடுப்பதற்கு சொக்லேட் உட்பட்ட பொருட்கள் பலவற்றை மாணவிக்கு வாங்கிக் கொடுத்து மாணவியின் மற்றொரு நண்பியின் பலாலி வீதியில் உள்ள வீட்டுக்கு அருகில் தானே இறக்கி விட்டதாக தாயார் கூறியதுடன் கண்கலங்கி நின்றார்.

மாணவியை விசாரனை செய்த போது வட்சப் ஊடாக பாடங்களில் சந்தேகம் கேட்டு கேட்டு தமக்கிடையே இவ்வாறான தொடர்பு ஏற்பட்டதாகவும் அவரை தான் லவ் பண்ணுகின்றேன் எனவும் மாணவி கூறியுள்ளார். உம்முடன் சேர்த்து அவன் 10க்கும் மேற்பட்ட பெண்களை இங்கு அழைத்து வந்து லவ் பண்ணியுள்ளான் என அயலவர்கள் குறித்த மாணவிக்கு விளக்கம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

குறித்த மாணவனின் புகைப்படங்கள் மற்றும் அம் மாணவனைத் தாக்கும் காட்சிகள் ஊடகங்கள் சிலவற்றுக்கு அனுப்பபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முகம் மற்றும் தலை போன்றவற்றில் இரத்தக் காயங்களுடன் காணப்படும் குறித்த பல்கலைக்கழக மாணவன் சிகிச்சைக்காக எங்கு சென்றார் என்பது தொடர்பாக தமக்குத் தெரியாது என அயலவர்கள் கூறியுள்ளார்கள்.

நேற்று மாலை தாக்குதலின் பின் இன்று பிற்பகல் வரை குறித்த மாணவன் அறைக்கு வரவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மாணவனின் லப்டொப், கைத்தொலைபேசி மற்றும் பல உபகரணங்களும் உடமைகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது வீடியோவில் காட்டப்பட்டுள்ளது

பெற்றோருக்கு நாம் தெரிவிப்பது என்னவெனில் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை மிக உண்ணிப்பாக அவதானியுங்கள். இல்லாவிடின் மிகவும் பாசத்துடன் ஆசையாக வளர்க்கும் உங்கள் பிள்ளைகள் உங்கள் தலையில் மண்ணை வாரி இறைக்கலாம்.. அல்லது தவறான நடத்தைகள் பிடிபட்டு தற்கொலை செய்யலாம்…. ஆகவே நீங்கள் உங்கள் பிள்ளைகளின் போக்கை தொடர்ச்சியாக அவதானியுங்கள்

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்

Recommended For You

About the Author: admin