அம்மன் ஆலயத்துக்கு தீ வைப்பு – வெள்ளித்தாலி திருட்டு

வவுனியா, தோணிக்கள் பகுதியில் உள்ள நாக பூசனி அம்மன் ஆலயத்திற்கு விசமிகள் சிலர் தீ வைத்துள்ளனர்.

ஆலயத்தின் தென்பகுதி வாயிலூடாக நுழைந்த மர்ம நபர் அல்லது மர்ம கும்பல் சிரட்டைகளை கொண்டே தீ வைத்துள்ளனர்.

மேலும், அம்மன் சிலையில் இருந்த வெள்ளித்தாலி ஒன்றினையும் சிலையின் கீழ் இருந்த சிறிய தங்க நகை ஒன்றினையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் ஆலய பூசகரால் தெரிவிக்கப்படுகிறது

இந்த சம்பவம் தொடர்பான விசாரனைகளை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: admin