திங்கள் முதல் கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்கு!

எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமை போன்று கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
முன் கட்டளை (ஆர்டர்) செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கையிருப்பு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இ-கடவுச்சீட்டு விநியகேம் தொடர்பில் நீதிமன்றில் தடையுத்தரவு உள்ளது. அது தொடர்பில் விலை மனுக் கோரல் கோரப்பட மாட்டாது.
நீதிமன்ற உத்தரவு முடிந்ததும் அது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: admin