இதுவரையில் 38088 டெங்கு நோயாளர்கள் பதிவு

இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று (16) வரையிலான காலப்பகுதியில் 38088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த நோயாளர்களுள் 24.8 வீதம் அதாவது 9451 நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

கம்பஹா மாவட்டத்தில் 4381 நோயாளர்கள், களுத்துறை மாவட்டத்தில் 2097 நோயாளர்கள் எனும் ரீதியில் மொத்தமாக மேல் மாகாணத்தில் 15929 நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அது மொத்த நோயளர்களுள் 41.8 வீதம் ஆகும்.

வடக்கு மாகாணத்தில் 4738 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளிகளில் இது 12.4 வீதம் ஆகும்.

மத்திய மாகாணத்தில் இருந்து 3895 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளிகளில் இது 10.2 வீதம் ஆகும்.

வடமேற்கு மாகாணத்தில் இருந்து 2521 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது 6.6 வீதம் ஆகும்.

தென் மாகாணத்தில் இருந்து 2834 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 7.4 வீதம் .

சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து 3875 நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இது 10.2 வீதம் ஆகும்.

இம்மாதத்தில் 1446, கடந்த மாதம் 3897, ஜூலை மாதத்தில் 4506, மே மாதத்தில் 2647, ஏப்ரலில் 2234, மார்ச் மாதத்தில் 3615, பெப்ரவரியில் 6007, ஜனவரியில் 10417 என நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 10 பிரதேசங்களில் டெங்கு அதிக அபாய நிலையில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin