சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த மாளிகைக்காட்டில் கூட்டம்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து பொத்துவில் தேர்தல் தொகுதியின் மாளிகைக்காடு பிரதேச மகளிர் கருத்தரங்கு முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு மத்திக்கிளை அமைப்பாளர் ஏ.எல்.எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டு தற்போதைய அரசியல் சூழ்நிலை சம்பந்தமான பெண்களுக்கு சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும் இந்த கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான எம்.எச்.எம். இஸ்மாயில், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு கிழக்கு தலைவர் எம்.எச். நாசர் ஆகியோரும் சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் உரையாற்றினர்.
இங்கு முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளருமான ஏ.சி.சமால்டீன், மாளிகைக்காடு மத்தி பெண்கள் அணித்தலைவி எம்.ஐ.எப். பர்ஸானா உட்பட முஸ்லிம் காங்கிரஸின் மத்தியகுழு உறுப்பினர்கள், பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin