ஒரே நேரத்தில் பலர் மர்மமான முறையில் உயிரிழப்பு: பொலிஸாரின் விசாரணையில் வெளியான உண்மை

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் பிரபலமான சொகுசு விடுதியொன்றில் 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் ஒருவர், மற்றவர்களை விஷம் குடிக்க வைத்ததன் பின்னணியிலிருந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பயன்படுத்திய தேநீர் கோப்பையில், சயனைட் (விஷம்) காணப்பட்டதுடன், அதனை உட்கொண்டதால் இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அந்நாட்டு காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும் விஷம் வைத்தவர் கடனினால் பாதிக்கப்பட்டவர் என்றும் அந்நாட்டுக் காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அந்நாட்டுக் காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin