சீனாவின் இராணுவ நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தாய்வான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நேட்டோ உச்சிமாநாட்டுக்கு இடையே பெய்ஜிங் இராணுவ பயிற்சிகளை நடத்துகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை (09.07.24) அமெரிக்கத் தலைநகர் வோஷிங்டனில் நேட்டோ மாநாடு ஆரம்பமானது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அப்போதைய சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட மேற்குநாடுகள் பாதுகாப்பு குழுவின் 75-வது ஆண்டு தினத்தை அனுசரிக்கும் விதமாக இந்த மாநாடு இடம்பெறுகின்றது.
இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக சீன போர் விமானங்களைக் கண்டறிந்ததன் பின்னர் சீனாவின் இராணுவ நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தாய்வான் தெரிவித்துள்ளது.
தாய்வானைச் சுற்றி “66 PLA விமானங்கள்” மற்றும் ஏழு கப்பல்கள் கண்டறியப்பட்டதாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.