அவுஸ்திரேலிய பெண் மீது தாக்குதல்: பப்புவா நியூ கினியாவின் அமைச்சர் கைது

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் பப்புவா நியூ கினியாவின் பெட்ரோலிய அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிட்னியின் புகழ்பெற்ற போண்டி கடற்கரைக்கு அருகில் இடம்பெற்றத் தகராறைத் தொடர்ந்து பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலாபகரமான இயற்கை எரிவாயு திட்டம் தொடர்பாக சர்வதேச பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகிக்கும் பெட்ரோலிய அமைச்சரான ஜிம்மி மாலடினா சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான 31 வயதான குறித்த பெண்ணின் முகத்தில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அமைச்சர் ஜிம்மி மாலடினாவை எதிர்வரும் வியாழக்கிழமை சிட்னி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin