யாழ் மருந்தகமொன்றில் அரச அதிகாரிகளை பூட்டி வைத்து அச்சுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றில் இன்று திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் உணவு கட்டுப்பாடு நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் மருந்தகமொன்றை சோதனையிட சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த அதிகாரிகளை கடை உரிமையாளர் மருந்தகத்திற்குள் பூட்டி வைத்து அச்சுறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு அரச அதிகாரிகளால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தத யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், அனுமதியின்றி மருந்து விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கடை உரிமையாளரை கைது செய்தனர்.

சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin