கொடூரமாக தாக்கப்பட்ட சிறுவன்: வெளிஓயாவில் மூவர் கைது

சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிஓயா பொலிஸார், முல்லைத்தீவு பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து இன்று (05) அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதே சந்தேக நபர்கள கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது தாக்குதலுக்கு உள்ளான சிறுவனும் இவர்களுடன் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவன் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, சிறுவனின் தந்தை என கருதப்படும் 45 வயதுடைய ஆண் ஒருவரும், 46 மற்றும் 37 வயதுடைய பெண்கள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் வெலிஓயா பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin