நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியப் பெண் கைதி ஷார்லட் மே லீ (Charlotte May Lee) குறித்துச் சமூக வலைத்தளங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் பல்வேறு வதந்திகள் பரவின.
இதனால் அவரது குடும்பத்தினரும், பிரித்தானிய அதிகாரிகளும் பெரும் கவலையடைந்திருந்தனர்.
இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் தற்போது ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளனர்.
ஷார்லட் மே லீ மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்துக் கைதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உறுதிப்படுத்தப்படாத வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

