சுஹுரு காலநிலை நீர்ப்பாசன விவசாய திட்டம்: 25 மில்லியன் டொலர்கள் வழங்க தீர்மானம்

சுஹுரு காலநிலை நீர்ப்பாசன விவசாய திட்டத்திற்காக அடுத்த வருடத்திற்கு மேலும் 25 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பல கடினமான மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள விவசாய அபிவிருத்தித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தத் தொகையை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கியதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள குளங்களின் புனரமைப்புப் பணிகள் மற்றும் புதிய விவசாய தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறும் நீர்ப்பாசன விவசாயத் திட்டத்திற்கு அமைச்சர் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin