‘புஷ்பா திரைப்படம் என்னை pan இந்தியா நடிகராக மாற்றவில்லை’

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது மட்டுமல்லாமல் இரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படமாகவும் இருந்தது. இதுவொரு pan இந்தியா திரைப்படம் என்பதோடு இதன் இரண்டாம் பாகமும் வரும் ஒகஸ்ட் 15ஆம் திகதி வெளிவரவிருக்கிறது.

புஷ்பா 1 ஆம் பாகத்தில் பஹத் பாசில் வில்லனாக மிரட்டியிருந்தார். இந்நிலையில் பாகம் இரண்டிலும் இவரது கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் பஹத் பாசில் அண்மையில் நடந்த பேட்டியொன்றில்,

“புஷ்பா திரைப்படத்தால் தனக்கு எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. அத் திரைப்படம் எனக்கு எதையும் செய்யவில்லை. pan இந்தியா நடிகராக எல்லாம் நான் மாறவில்லை. சுகுமார் சார் மீது இருக்கும் மரியாதைக்காக அதில் நடித்தேன். எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. நேர்மையாகவே சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இவரது இந்த கருத்து, என்னடா இது இப்படி சொல்லிட்டாரே என்று பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஆனால், இன்னொரு புறம் பகட்டுக்காக பொய்யைக் கூறாமல் இவரது நேர்மையான பதில் நன்றாகவும் இருந்தது.

Recommended For You

About the Author: admin