ரி20 உலகக் கிண்ணம் தொடர்: பயங்கரவாத அச்சுறுத்தல்

ரி20 உலகக் கிண்ணத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளார்.

ரி20 உலகக் கிண்ணத் தொடர்வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ரி20 உலகக் கிண்ணத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, அமெரிக்காவில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது.

போட்டியை நடத்துபவர்கள் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். துரதிஷ்டவசமாக, 21ஆம் நூற்றாண்டில் பயங்கரவாதம் வெவ்வேறு விதமாக அனைத்து இடங்களிலும் இருக்கிறது என்றார்.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் இந்த ரி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin