ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகிய மதீஷ பத்திரன

ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன மீதமுள்ள தொடர்களிலிருந்து விலகியுள்ளார்.

காயம் காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை அணிக்கு கடைசியாக நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் காயம் ஏற்பட்டதன் காரணமாக பத்திரன களமிறங்கவில்லை.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் மதீஷ பத்திரன இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சஹாரும் உபாதைக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin