பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

நாடளாவிய ரீதியில் நாளை முதல் கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளையும் நாளை மறுதினமும் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin