தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் விமானம் மூலம் சென்னையை வந்தடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னையைச் சென்றடைந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எல்லை தாண்டி மீன்பிடித்தாக சென்ற மார்ச் 24 ஆம் திகதி படகுகளுடன் இராமேஸ்வர மீனவர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதேவேளை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட இராமேஸ்வர மீன்பிடி படகோட்டிகள் 3 பேரை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin