தோனியின் அதிரடி ஆட்டம் வீண்

2024 ஐபிஎல் தொடரின் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

தொடரின் 34 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

நாணய சூழற்சியில் வெற்றிபெற்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவெடுத்திருந்தது.

இதன்படி, சிறப்பாக பந்து வீசிய லக்னோ அணியினர் சென்னை அணியின் வீரர்கள் ஓட்டமெடுப்பதை வெகுவாக கட்டுப்படுத்தியிருந்தனர்.

ஆரம்பம் முதலே தடுமாறிய சென்னை அணியின் முன்னணி வீரர்கள் மிகவும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆனால் ரவீந்திர ஜடேஜா நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்டங்களை உயர்த்தினார்.

எனினும், கடைசி நான்கு ஓவர்களை சிறப்பாக விளையாடிய சென்னை அணியினர் மொத்த ஓட்ட எண்ணிக்கையை 176 ஆக உயர்த்தினர்.

சென்னை அணி சார்பில் ஜடேஜா ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களை பெற்றிருந்தார். எம்.எஸ் தோனி இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெறும் ஒன்பது பந்துகளில் 28 ஓட்டங்களை குவித்தார்.

லக்னோ அணி சார்பில் க்ருணால் பாண்டியா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லக்னோ அணியினர் 19 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தனர்.

அந்த அணியின் தலைவர் கே.எல் ராகுல் 82 ஓட்டங்களையும், குயின்டன் டி கொக் 54 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் எட்டுப் புள்ளிகளுடன் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin