நியூயார்க்கில் நீதிமன்றுக்கு வெளியே ஒருவர் தீக்குளிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பண வழக்கு நடைபெற்று வரும் நியூயார்க் நீதிமன்றத்திற்கு வெளியே நபர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர் டிரம்பை குறிவைத்ததாகத் தெரியவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Maxwell Azzarello என்ற நபர் தனக்கு தானே தீவைத்துக்கொண்டதாக நியூயார்க் நகர பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் பாரிய தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், கார்னெல் பல்கலைக்கழகத்தில் தீக்காயப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் அவர் தீக்குளித்தமைக்கான காரணம் வெளியாகவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து நீதிமன்ற வாளாக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புளோரிடாவை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் இந்த வார ஆரம்பத்தில் நியூயார்க் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீக்குளிக்கும் முன் அவர் மிகவும் அமைதியாக இருந்ததாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் Azzarelloவின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin