சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டின் மீது (14.04.2024) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று அதிகாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சல்மான் கானின் வீட்டையும் வானத்தையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் வெளிப்புறச் சுவர்களில் சுமார் ஐந்து துப்பாக்கி ரவைகள் இருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக மும்பை பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளதுடன், சந்தேக நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான் கான், ஒரு பெரிய கும்பலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ள 10 பேரில் ஒருவர் என்று தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு, சல்மான் கானுக்கு வந்த மிரட்டல் அழைப்புகள் வந்திருந்ததுடன், மும்பை பொலிஸார் அவருக்கான பாதுகாப்பை அதிகரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin