வெற்றியை சுவீகரித்த பஞ்சாப் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிராக நேற்று (04) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

அகமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

குஜராத் அணி சார்பில் அணி தலைவர் சுப்மன் கில் 89 ஓட்டங்களையும், சாய் சுதர்ஷன் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பஞ்சாப் அணி சார்பில் பந்துவீச்சில் ரபாடா 2 விக்கெட்டுகளை அதிகப்பட்சமாக பெற்றுக் கொண்டார்.

200 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி ஒரு பந்து மாத்திரம் மீதமிருக்க 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

பஞ்சாப் அணி சார்பில் ஷஷாங்க் சிங் ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பெற்று போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Recommended For You

About the Author: admin