சஹரானின் மைத்துனர் உட்பட பலர் கைது

காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட 30 மேற்பட்டவர்களை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சஹரானின் அடிப்படை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடும் நோக்கில் இவர்கள் கலந்துரையாடியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஸஹ்ரான் ஹாசிமின் சாகோதரியின் கணவர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin