கோப்பாயில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்தியப் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

நேற்று (19) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த சம்பவம் தொடர்பாக நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin