‘ஜனாதிபதிக்கும் எனக்கும் தனிப்பட்ட அரசியல் தொடர்புண்டு’

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தனக்கும் தனிப்பட்ட ரீதியிலான அரசியல் தொடர்பு மற்றும் நெருக்கம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சரத் பொன்சேகாவை விலக்குவதற்கு எதிரான நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க எனது முன்னாள் தலைவர் மட்டுமன்றி என்னை அரசியலுக்கும் கொண்டுவந்தவர் அவர்தான்.

அவருக்கும் எனக்கும் இடையிலான தொடர்பு அரசியல் ரீதியானது அல்ல. தனிப்பட்ட ரீதியிலானது.

அதே நேரம் , மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து அரசியல் செய்வது குறித்து நான் ஒருபோதும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin