சட்டமா அதிபர் அனுமதி இன்றி சட்டத்தணிகளை கைது செய்ய முடியாது

சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி இனி சட்டத்தரணிகளை கைது செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என்று சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தவபாலன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர் அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இந்த சந்திப்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இனி வரும் காலங்களில் சட்டத்தரணிகளை கைது செய்யும்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி பெறப்படாமல் கைது செய்ய முடியாது என அதன் போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த தீர்மானத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு சட்டமா அதிபர் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin