கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய யாழ்ப்பாணிஸ்.!

கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய யாழ்ப்பாணிஸ்.! கீழே வீடியோ இணைக்கப்படுள்ளது.

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம், முற்றவெளியில் நடைபெற்றது.

குறித்த இசைநிகழ்ச்சியில் முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்கள்,

தடைகளை உடைத்துக் கொண்டு இளைஞர்கள் மேடையை நோக்கி ஓடிய நிலையில் நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டு சிறிது நேரம் அமைதி இன்மை ஏற்பட்டது.

பின்னர் ஒரு மணித்தியாலத்தில் நிகழ்ச்சி முடிவடைந்தது. இசை நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை தென்னிந்திய பிரபலமான கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் யாழ்ப்பாணத்தில் ஒரு பகுதியில் காட்சி படுத்தப்பட்டு இருந்தது.

Recommended For You

About the Author: admin