எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்த மக்கள்

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  (31.12.2023) நீண்ட வரிசையில் காத்திருந்து பொது மக்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பிச் சென்றதை காணமுடிந்தது.

ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

எரிபொருள் உள்ளிட்ட சுமார் 90க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வற் வரி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஜனவரி முதலாம் திகதி முதல் எரிபொருள், எரிவாயு உள்ளிட்டவைகளின் விலை அதிரிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திருத்தியமைக்கப்பட்ட வற் வரி விகிதங்கள் எரிபொருள் விலையை பாதிக்கும் என்பதால் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கும் என எரிபொருள் விநியோகஸ்தர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையிலேயே, இன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த எதிர்பொருள் பெற்றுச் சென்றதை காணமுடிந்தது.

Recommended For You

About the Author: admin