முச்சக்கரவண்டி கட்டணத்தை இன்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு சாரதிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் தேசிய சங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, இரண்டாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் 80 ரூபா கட்டணம் 100 ரூபாவாக அதிகரிக்கப்படும் என குறித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி 18 வீதம் இன்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், முதலாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் 100 ரூபா கட்டணத்தில் மாற்றம் இல்லை எனவும் முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் உறுதியளித்துள்ளார்.