கஜேந்திரகுமாரை பொது வேட்பாளராக முன்மொழியும்: சி.வி.விக்னேஸ்வரன்

மூன்று மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய பொது வேட்பாளர் ஒருவரினால் தமிழ் மக்களுக்கு நல்ல சேவையை வழங்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்குக் கிழக்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவ்வாறான ஒரு பின்னணியில் கஜேந்திரகுமார் தேர்தலை புறக்கணிப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தேர்தல் புறக்கணிப்பை கண்காணித்து வழி நடத்தியிருப்பார்கள்.

எனினும் தற்போது வடக்குக் கிழக்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவ்வாறான ஒரு பின்னணியில் கஜேந்திர குமார் எவ்வாறு தேர்தல் புறக்கணிப்பை வெற்றிகரமாக அமுல்படுத்துவார்.

மேலும் சிங்கள தேசிய கட்சிகளுக்கு ஆதரவான உள்ளூர் கட்சிகள் இயங்கி வருகின்றன. எனவே எவ்வாறு கஜேந்திரகுமார் சிங்கள வேட்பாளர் ஒருவரை புறக்கணிக்குமாறு கோர முடியும்?

கடந்த பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாக்குகள் என்னப்பட்ட போது பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

அவ்வாறான ஒரு பின்னணியில் தேர்தலை பொதுமக்கள் நிராகரித்தால் என்ன நடக்கும். வாக்காளர்கள் வீட்டில் இருக்கும்போது அவர்களது வாக்குகள் அளிக்கப்படலாம்.

மறுபுறத்தில் கஜேந்திரகுமார் போன்று மூன்று மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய பொது வேட்பாளர் ஒருவரினால் தமிழ் மக்களுக்கு நல்ல சேவையை வழங்க முடியும்.

மூன்று மொழிகளும் தெரிந்த ஒரு பொது வேட்பாளரினால் ஏனைய இன சமூகங்களுக்கும் தகவல்களை எடுத்துச் சொல்ல முடிகின்றது.

அவ்வகையில் கஜேந்திரகுமார் தேர்தலில் போட்டியிட்டால் எனது வாக்கு அவருக்கே.

அவர் தொலைக்காட்சியில் சிங்கள மொழியில் உரையாற்ற வேண்டும். தமிழர் பிரச்சினைகளை எடுத்துரைக்க வேண்டும் என விரும்புகின்றேன்” என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin