இலங்கை அணி அறிவிப்பு: அணிக்கு திரும்பினார் ஏஞ்சலோ மெத்யூஸும்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ள இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத தொடக்கத்தில் ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், பானுக ராஜபக்ஷ மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 அணிக்கு ஏஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

டி20 தொடரில் விளையாட 22 பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு விளையாட்டு அமைச்சரின் அனுமதியும் கிடைத்துள்ளது. டி20 அணிக்கு வனிந்து ஹசரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், சரித் அசலங்க உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பானுக ராஜபக்ஷ, பினுர பெர்னாண்டோ மற்றும் அகில தனஞ்சய ஆகியோரும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கை அணியின் விபரம் வருமாறு,

வனிந்து ஹசரங்க

சரித அசலங்க

பெதும் நிஸ்ஸங்க

குசல் மெண்டிஸ்

சதீர சமரவிக்ரம

தசுன் ஷானக

ஏஞ்சலோ மேத்யூஸ்

தனஞ்சய டி சில்வா

மகேஷ் தீக்ஷனா

நுவன் துஷார

குசல் ஜனித்

பானுக ராஜபக்ஷ

கமிந்து மெண்டிஸ்

மதீஷ பத்திரன

துனித் வெள்ளாலகே

அகில தனஞ்சய

ஜெஃப்ரி வாண்டர்சே

சாமிக்க கருணாரத்ன

பினுர பெர்னாண்டோ

பிரமோத் மதுஷான்

தில்ஷான் மதுஷங்க

ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களே ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளனர்.

Recommended For You

About the Author: admin