கை, கால்கள் அறுத்து பெட்ரோல் ஊற்றி பெண் ஐ.டி ஊழியர் கொலை

தமிழகத்தின் மதுரையை சேர்ந்த நந்தினி (28) சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று அவரது பிறந்தநாள் என்பதால், முன்னாள் காதலன் வெற்றி கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு கூட்டி சென்றுள்ளார்.

பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருகிறேன் என்று கூறி அழைத்து சென்ற முன்னாள் காதலன், இரவில் கேளம்பாக்கம் அருகே நந்தினியை சங்கிலியால் கட்டி, கை, கால்களை அறுத்து எரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கொலை செய்துவிட்டு தப்பியோடிய வெற்றியை, பொலிஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நந்தினி தன்னை காதலித்து கைவிட்டதால் திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார்.

அதாவது தான் காதலித்து வந்த வெற்றி திருநங்கை என்று தெரிந்ததால், காதலை நந்தினி கைவிட்டுள்ளார்.

நந்தினி வேறொரு இளைஞரை காதலிப்பதை அறிந்ததால், திட்டம் போட்டு வெற்றி இந்த கொலையை செய்துள்ளார்.

கைதான வெற்றியிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin