டெல்லியில் நடைபெற்ற NITI Aayog கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்பு
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற NITI Aayog ஆளும் குழுக் (Governing Council) கூட்டத்தில், தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றார்.
பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில், மாநில வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கூட்டாட்சி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
தமிழகத்தின் முன்னேற்றத் திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் தேவைகள் தொடர்பான கருத்துகளையும் முதல்வர் விஜய் கூட்டத்தில் முன்வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


