நடுவானில் உடல்நலக்கோளாறால் பரிதாபமாக உயிரிழந்த பெண்

இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை நகருக்கு இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு 1 மணிக்கு பயணிகள் விமானம் கிளம்பியது.

அப்போது விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து 1:30 மணியளவில் விமானம் மீண்டும் ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு திரும்பியது.

அங்கிருந்து 4 பயணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்த பெண் பயணியை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.

Recommended For You

About the Author: admin