யாழில் கடந்த நான்கு நாட்களில் 102 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் தொஸார் முன்னெடுத்துள்ள தொடர் தேடுதலில் கடந்த 4 நாட்களில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டிலையே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 70 பேரும் , காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 32 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor