தனுஷ்க குணதிலக்க மீதான தடை நீக்கம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (23) ஆரம்பமாகவுள்ள இன்டர் கிளப் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க குணதிலக்க இணைந்து கொள்ளவுள்ளார்.

பெண் ஒருவர் துஷ்பிரயோகம்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண தொடரின் போது பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட தனுஷ்க குணதிலகதாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் அவரது விளையாட்டுக் கழகமான SSC விளையாட்டுக் கழகம் உள்ளூர் போட்டிகளில் விளையாட அவர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்காததால் அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor