வடக்கில் 29 பாடசாலைகளுக்கு பூட்டு

வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுரையில் 5 ஆயிரத்து 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 200 குடும்பங்ளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் மாத்திரம் 1708 குடும்பங்களைச் சேர்ந்த 5,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ளவர்களை தங்கவைக்கும் நோக்கில் இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்துவதற்காக வட மாகாணத்தின் 29 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin