வவுனியாவில் மாணவியை தாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல்

வவுனியாவில் மாணவி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் மாணவி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டிலும், குறித்த மாணவியினை தற்கொலைக்கு தூண்டியமை தொடர்பிலும் பாடசாலை ஆசிரியரை நேற்றைய தினம் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸார் கைதுசெய்தனர்.

இதனையடுத்து கைதான குறித்த ஆசிரியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மாணவி தாக்கப்பட்ட நிலையில் இரு வாரங்களுக்கு முன்னர் ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அந்த இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு ஆசிரியர் அழுத்தம் வழங்கியதாவும், வேறு வழிகளில் தனக்கு அச்சுறுத்தல் வழங்கியதாகவும் அதன் காரணமாக தான் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் மாணவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதனடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin