ஷானியின் பாதுகாப்பை அதிகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு உடனடியாக போதிய பாதுகாப்பை அதிகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் தமக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையின் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி முன்னிலையில் விசாரணைக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin