முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கைது!

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெற்ற விபத்து
வெள்ளவத்தை, கடற்பரப்பை அண்மித்த வீதியில் நேற்று (28) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவி செனவிரத்ன ஓட்டிச் சென்ற கார் பஸ் மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன இன்று (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor