” அர்த்த நாரீஸ்வரர் வடிவம் உணர்த்தும் வாழ்வியல் ” சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு

நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு நடைபெற்றது.


யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் 27.10.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத் தலைவர் த.சோதிலிங்கம் அவர்கள் தமையுரை ஆற்றினார்.

சிறப்புச்சொற்பொழிவினை சைவப்புலவர் சி. கா. கமலநாதன் அவர்கள் ” அர்த்த நாரீஸ்வரர் வடிவம் உணர்த்தும் வாழ்வியல் ” விடயப்பொருளில் சிறப்புச்சொற்பொழிவும், சொற்பொழிவில் இருந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

Recommended For You

About the Author: S.R.KARAN