திமுக பிரமுகர் மகன் வெட்டிக்கொலை

திருவொற்றியூர் பகுதியின் திமுக பகுதி பிரதிநிதியின் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூர் அடுத்த விம்கோநகர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் திருவொற்றியூர் பகுதியின் திமுக பகுதி பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார். இவரது மகன் காமராஜ். தந்தை மகன் இருவரும் திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் மாநகராட்சி பணிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுத்து செய்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம் போல் காமராஜ் இன்று காலை அவரது அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, அவரது அலுவலகத்திற்கு இருசக்கரவாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அலுவலகத்தின் உள்ளேயே புகுந்து காமராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர் காமராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரும் முன் மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர்

பின்னர், அக்கம் பக்கத்தினர் மீட்டு காமராஜை அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, எண்ணூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin