நீராடச் சென்ற சிறுவன் மாயம்

14 வயது சிறுவன் ஒருவன் கொக்கல கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்றபோது நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை காணாமல் போயுள்ளார் என ஹபராதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வரக்காப்பொல பிரதேசத்தில் மில்லகஹதொல கணித்தபுர பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிவ ஆகாஷ் என்ற சிறுவனே இவாறு காணாமற்போயுள்ளார்.

இந்நிலையில் சிறுவனை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் கடற்படை வீரர்கள் மற்றும் அப்பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை இச்சம்பவத்துக்கு முன் நேற்றைய தினம் பிற்பகல் கொக்கலை கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு நபர் ஒருவரும் கடலில் மூழ்கி, அப்பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor