நீதிபதி சரவணராஜா பதவி விலகலுக்கு நாடுகடந்த தமீழீழ அரசு கண்டனம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் விடுத்துள்ளது.

தமிழ் நீதிபதிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்திய இந்த செயற்பாடு இலங்கையின் நல்லிணக்கத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், குறித்த நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டைவிட்டு வெளியேறிய நீதிபதி
தமக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியை இராஜினாமா செய்த முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரீ.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது

இந்நிலையில் குருந்தூர் மலை விவகாரத்தில் நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் அரசியல் தலைவர்கள் உளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவம் குறித்த விசாரணைகளிற்கு ஜனாதிபதி ரணிலும் உத்தவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor